February 17, 2015

மகிந்தரின் மூன்று பிள்ளைகளும் பல பெண்களுடனாம்! குவியும் புகார்கள்!


நமல், யோஷித மற்றும் ரோஹித ஆகிய மூவரும் செய்த நாச வேலைகளுக்குத் தங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும்,
அதிலும், நமல் ராஜப்ஷ நீலப்படை என்ற பெயரில், பெண்களைக் கடத்தும் கும்பலையே வைத்து நடத்தியதாக ஜாதிக ஹெல உருமய அமைப்பின் தலைவர் நிஷாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.MS Doter

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ஷ மட்டுமல்லாது அவரது மொத்த குடும்பத்துக்குமே கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது போல. ஏற்கனவே அவர் அதிபர் பதவி இழந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் அவரால் நியமிக்கப்பட்டவர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவி இழந்து வந்தனர். இதனை அடுத்து அவரது மூன்று மகன்கள் மீதும், சிங்கள அமைப்பு ஒன்று பாலியல் மற்றும் ஊழல் புகார்களை சுமத்தியுள்ளது.
முன்னாள் அதிபர் ராஜபக்ஷவின் மகன்களான நமல், யோஷித மற்றும் ரோஹித ஆகியோர், இது வரை எண்ணிலடங்காத பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கையின் சிங்கள அமைப்பான ஜாதிக ஹெல உருமய தெரிவித்துள்ளது.
முன்னாள் அதிபர் ராஜபக்ஷவின் மூன்று மகன்களும், பல பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதுடன், பல பெண்களை கடத்தி பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் இவ்வமைப்பு புகார் செய்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது,
ராஜபக்சேவின் மூன்று மகன்களும் பல்வேறு விதமான ஊழல்களிலும் பாலியல் பலாத்காரச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவற்றை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இதுதொடர்பாக எங்களிடம் விரிவான தகவல்கள் உள்ளன. அவர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களுக்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த மூன்று பேரும் ஏராளமான இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். செக்ஸ் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலப்படை என்ற பெயரில் நமல் செய்த அட்டகாசம்தான் மிகப் பெரியது. இது நாட்டின் மாற்று ராணுவம் போல செயல்பட்டு வந்தது. நமல் தலைமையில் இயங்கி இந்த நீலப்படையினர் கடத்திய பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்த மூவராலும் பாதிக்கப்பட்ட பெண்கள் எக்கச்சக்கமாக உள்ளனர். இத்தனை பேர்தான் என்று கூற முடியாத அளவுக்கு சரமாரியாக இவர்கள் பல பெண்களை சீரழித்துள்ளனர். தங்களால் சீரழிக்கப்பட்ட பல பெண்களுக்கு ஏராளமான பணத்தையும், பதவிகளையும் கொடுத்து இவர்கள் சரிக்கட்டியுள்ளனர். இந்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.
இந்த மூன்று பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். யாரையும் தப்ப விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே இந்த மூன்று பேருக்கும் பல நடிகைகளுடன் தொடர்பு உள்ளதாக ஒரு தகவல் உண்டு. அதிலும் நமல் ராஜபக்சேவுக்கும் இந்திய நடிகைகள் பலருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும்  எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி, எதிர் வருங் காலத்தில் இன்னும் பல ஆதாரங்கள் வெளியிடப் படும் எனவும் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment