February 16, 2015

மதியபோசனத்துடன் கூடிய தூதுக்குழு மட்டப் பேச்சுக்கள் ஆரம்பம்!

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையிலான மதியபோசனப்
பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், மதியபோசனத்துடன் கூடிய இந்த தூதுக்குழு மட்டச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
இதில், இருதரப்புகளும் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றன.

இந்தப் பேச்சுக்களில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், கொழும்புக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் சுவாமிநாதன், ராஜித சேனதாரத்ன, ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment