February 16, 2015

றோவின் பிடியில் தமிழ் தலைமைகள்! ஆதாரம் அம்பலம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பினை சிதைக்க இந்தியா எடுத்திருக்கும் புதிய அவதாரத்தில் நடத்தப்பட்ட கண்டி கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள் பற்றிய
மேலும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.
அவ்வகையில் கிழக்கிலிருந்து விழுதுகள் எனும் அமைப்பினை இயக்கிக்கொண்டிருக்கும் சாந்தி சச்சிதானந்தன், முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரனின் பிரதிநிதிகள் மற்றும் சித்தார்த்தன் தவிர்ந்த கூட்டமைப்பு பிரமுகர் பேராசிரியர் சிவச்சந்திரனென கலந்து கொண்ட மற்றையவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை அறியப்பட்டிருக்கின்றது.
ஊடகவியலாளர் சிவராம் படுகொலை சந்தேகக நபர்களுள் ஒருவரான ஆர்.ஆர் எனும் நபரும் சித்தார்த்தனுடன் இச்சந்திப்பில் இருந்துள்ளார்.
கூட்டமைப்பினை நல்வழிப்படுத்தி தமிழ் தேசியப்பாதையில் பயணிக்க வைக்க தமிழ் தரப்புக்கள் பாடுபட்டுவரும் நிலையில் அதனை சிதைக்க இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அம்பலமாகியுள்ளது.
இதனிடையே இரகசிய சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளிக்கசிய தொடங்கியதையடுத்து அவசர அவசரமாக பிரமுகர்களது வாகன சாரதிகள் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் தகவல்களை ஊடககங்களிற்கு பரிமாறவேண்டாமென அனைத்து மட்டங்களிலும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment