February 17, 2015

யுத்தக்குற்ற அறிக்கை ஜெனீவா மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்படவில்லை!

சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக்குற்ற அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்ற போதும், ஜெனீவா
மனித உரிமைகள் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இந்த அறிக்கை குறித்த விவாதம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் 25ம் திகதி சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று, மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அறிக்கையை தாமதித்து வெளியிட சம்மதம் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணையாளர், ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment