August 13, 2016

முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் ஆளுனருக்குத் தெரியாதாம்!

முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்தமை தொடர்பாக எந்தவொரு தகவல்களும் தனக்கு தெரியாது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே கூறியுள்ளார்.
வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னதாகவே அது தொடர்பாக அறிந்தேன். இது தொடர்பாக என்னிடம் ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினால் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஆளுநரிடம், முன்னாள் போராளிகளின் தொடர் உயிரிழப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்தமை தொடர்பாக வடமாகாண ஆளுநர் என்ற வகையில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குபதிலளித்த ஆளுநர் மாகாணசபையில் மேற்படி விடயம் தொடர்பாக பேசப்பட்டபோதே எனக்கு அந்த விடயம் தெரியவந்தது. எனக்கு எவரும் அது தொடர்பாக தெரியப்படுத்தவில்லை. எனவே ஆதாரபூர்வமாக எனக்கும் தெரியப்படுத்தப்படுகின்ற போது அது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல என்னால் முடியும். மேலும் வட மாகாணசபையில் இந்த விடயம் பேசப்பட்டுள்ளமையினால் அது ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்வதற்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment