August 14, 2016

ஜெயகுமாரியை மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

 
ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டும் முடக்கம் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்ட போது அவருடைய அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் பொலிஸார் பெற்றிருந்தனர்.

ஏற்கனவே ஜெயக்குமாரி மீது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டான விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்பது தொடர்பிலேயே இந்த விசாரணையும் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment