August 14, 2016

வெளிநாடுகளில் இலங்கையின் பெயரைக் கெடுத்தவர் மஹிந்த! - சஜித் பிரேமதாச

நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற செமட்ட செவன வீடமைப்பு வேலைத் திட்டத்தின் விசிறிநிவாச காசோலை வழங்கல் மற்றும் உறுதிப்பத்திரம் கட்டிடப்பொருட்கள் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
படைத்தரப்பை காட்டி நாட்டை கொள்ளையடித்த கொள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து இலங்கையை சுபீட்சமிக்க நாடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசங்கவும் இணைந்து கட்டியெழுப்பி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment