August 13, 2016

உறுதிமொழி இல்லாமல் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார் மகேஸ்வரன்!

ஆக்கபூர்வமான உறுதிமொழி வழங்கப்பட்டால் மாத்திரமே தான் உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


 
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, அவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று மாலை பார்வையிட்டனர். இதன் போது, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர் வலியுறுத்திய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment