August 6, 2016

மு.திருநாவுக்கரசின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தனின் ஏற்பாட்டில், வவுனியா தமிழ்ச்சங்கத்தினால், அதன் தலைவர் தமிழருவி சிவகுமாரன் தலைமையில்
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசர மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய இல ங்கை அரசியல் யாப்பு – டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை (193 – 2016) நூல் வெளியீட்டிற்கு தமிழருவி சிவகுமாரன் தலைமையுரையாற்றுவதையும் சங்கத்தின் முக்கிய உறுப்பினரும் எழுத்தாளருமாகிய மேழிக்குமரன், புளொட் – ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்த்தன்,

ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், அரசியல் ஆய்வாளர்களாகிய நிலாந்தன்.

ஜோதிலிங்கம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உபதலைவர் பேரசரியரியர் சி.க.சிற்றம்பலம், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட மாகாணசபை உறுப்பினர்களாகிய தியாகராஜா, இந்திரராஜா, ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலாரப்பட்டவர்களையும் படங்களில் காணலாம்.














No comments:

Post a Comment