May 31, 2016

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் 9 பேர்கைது!

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 9 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாண மாவட்ட எலைப்பரப்பிற்குள் உள்ள வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் அட்டைத் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 9 பேர்கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயன்படுத்திய 3 படகுகளும் எம்மால் கையகப் படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் குறித்த தொழிலுக்கான அனுமதிகள் இருக்கவில்லை. என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய தினம் நீதி மன்றில் ஆயர் செய்யப்படவுள்ளனர் எனத்தெரிவித்தார்.

No comments:

Post a Comment