July 8, 2016

சாலாவ பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகம்!

சாலாவ பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து குறித்த பகுதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுவரை இழப்பீடுகளை வழங்காதவர்களுக்கு, உடனடியாக இழப்பீடுகளை வழங்குமாறும், பொதுமக்களின் வாழ்விடங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களை அப்புறப்படுத்துமாறு கோரியுமே குறித்த துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று நாள் முழுவதும் கொஸ்கம மற்றும் ஹங்வெல பகுதிகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று காலை கொஸ்கம நகரத்திலும், பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவு வரை ஹங்வெல பகுதியிலும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment