July 8, 2016

புழல் சிறையில் பித்து பிடித்தவன் போல பேசாமல் மௌனம் காக்கும் ராம்குமார்!

புழல் சிறையில் ராம்குமார் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே உள்ளான். பித்து பிடித்தவன் போல காணப்படுகிறான். சிறையில் ராம்குமார் கேட்கும் உணவை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சுவாதி கொலையில் கைதான ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான்.

பின்னர் சிறை வளாகத்தில் தனியாக உள்ள மருத்துவமனை பகுதியில் (ஆஸ்பத்திரி பிளாக்) தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

கைது செய்யப்பட்ட போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் மீண்டும் சிறையில் அது போன்ற செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் சிறை துறையினர் மிகுந்த கவனமுடன் செயல்படுகிறார்கள்.

இதற்காக ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள தனி அறை அருகே 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறையில் ராம்குமார் கேட்கும் உணவை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவில் இடியப்பம் அல்லது இட்லி அவருக்கு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment