July 21, 2016

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்குறித்த விசாரணைகள் மீளஆரம்பம்!

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது.


ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, தாக்குதல் நடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஸ்ட ஊடகவியலாளர்களான உபாலி தென்னக்கோன் மற்றும் கீத் நொயர் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளன.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது.

No comments:

Post a Comment