July 21, 2016

கதிர்காம புனித பூமியில் நிறைந்துள்ள கழிவுகள்!

நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த கதிர்காமம் உற்சவத்தின் பின்னர் அங்கு அதிகளவான குப்பைகளும், கழிவுகளும் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும்பொருட்களே இங்கு அதிகம் குவிந்து கிடப்பதாக கதிர்காம நகரசபை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கதிர்காமத்தை சூழவுள்ள புனித பூமியின் சுத்தம் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் பலனற்றுப் போய்விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாத்திரிகர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கிகளும் சேதமாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment