July 29, 2016

இலங்கையுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக அமெரிக்கா அறிவிப்பு!

இலங்கையுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.



இரு நாடுகளுக்கும் இடைய உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஜனவரி மாதம் 8ம் திகதி இலங்கையில் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை வாக்காளர்களன் நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.அனைத்து விடங்களிலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதிகளவான ஜனநாயகம் சமவுரிமைகள் அதிகளவான சுபீட்சத்தை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment