July 20, 2016

கடதாசி மட்டைகளை காண்பித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது!

வெறும் கடதாசி மட்டைகளை காண்பித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மோதரை - டில்சால் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியு போதே ஆவுரு் இதுனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு நல்லாட்சிக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன எழுப்பிள்ள கேள்விகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.ஷ
இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில், சுற்றரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. பந்துல குணவர்த்தனவின் கேள்விகளுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment