July 23, 2016

ஆசிய ஆயர்கள் மாநாடு சிறிலங்காவில்!

கத்தோலிக்கத் திருச்சபையின் ஆசிய ஆயர்கள் மாநாடு முதல் முறையாக சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் நொவம்பர் 28ஆம் நாள் தொடக்கம், டிசெம்பர் 5ஆம் நாள் வரை, ஆசிய ஆயர்கள் மாநாடு நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் உள்ள 150 கத்தோலிக்க ஆயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கான ஒழுங்கமைப்புப் பணிகள் தொடர்பாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment