July 21, 2016

12 ஆயிரம் பேரை நாடு கடத்தவுள்ளது இலங்கை!

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12000 வெளிநாட்டவர்கள் உரிய வீசாயின்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.
இவ்வாறானவர்கள் நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதெனத் தெரிவித்த அவர் இவர்களைக் கைதுசெய்து நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவவும் குறிப்பிட்டார்.

 
உரிய வீசா அனுமதியில்லாமல் 12000 வெளிநாட்டவர்கள் நாட்டில் தங்கியுள்ளனர். சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்து கூடிய விரைவில் நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டவர்களில் அதிகமானவர்கள் சுற்றுலா வீசாக்களின் மூலம் இலங்கை வந்தவர்களாவர்.

No comments:

Post a Comment