June 7, 2016

ஜோதிடரின் கூற்று உண்மையாகியுள்ளதா?

இலங்கையின் பிரபல ஜோதிடர் ஒருவர் இந்த வருடத்தில் இலங்கையில் மிகப் பெரிய தீசம்பவம்
ஒன்று ஏற்படும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே குறித்த ஜோதிடரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் நேற்றைய தீ விபத்து சம்பவம் இடம்பெற்றிருப்பதாக இணையங்கள் ஊடாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட மஞ்சுல பீரிஸ் என்ற ஜோதிடரே இந்த எச்சரிக்கையினை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜோதிடரின் கருத்துக்களை மையப்படுத்தி தற்போது இணையங்களில் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment