May 30, 2016

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பரிசீலிக்க அரசு தயார்:நீதி அமைச்சர்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதில் அரசியல் தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும்
அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கும் அரசு தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும், ஒரு நிறைவேற்றுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் தீர்வுத் திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும் தேவை ஏற்படின் கூட்டமைப்புடன் இரு தரப்புப் பேச்சுக்களை நடத்தவும் அரசு தயாராக இருக்கின்றது, என்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment