October 11, 2015

யாழில் சட்டவிரோதமாக மாடு வெட்டும் கொல்கலம் கண்டுபிடிப்பு!

யாழ்.சங்கானை பகுதியில் பிரதேச செயலர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோரின் உத்தியோகபூர்வ முத்திரைகளை(சீல்) போலியாக தயாரித்து சட்டத்திற்குமாறாக கால் நடைகளை வெட்டும் கொல்கலம் ஒன்று பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கியுள்ளது.

மேற்படி கொல்கலம் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அங்கு சட்டத்தை மீறி அதிகாலை 3 மணிக்கே மாடுகள் வெட்டப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட இறைச்சிகளை இடமாற்றுவதற்கு அனுமதி வழங்கும் சிட்டைகள் மற்றும் முத்திரைகள் போலியாக தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அங்கிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 400 கிலோ இறைச்சி மற்றும் 2 மாடுகள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment