October 12, 2015

யேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2015(படங்கள் இணைப்பு)

தமிழர் விளையாட்டு விழா 2015 யேர்மனியில் கடந்த சனிக்கிழமை அன்று Willich நகரத்தில் நடைபெற்றுள்ளது . தமிழீழ தேசியக் கொடி, யேர்மன் நாட்டுக் கொடி  ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் விளையாட்டுகள் அனைத்தும் ஆரம்பித்தன .


இவ் வருட தமிழர் விளையாட்டு விழா தவிர்க்க முடியாத காரணத்தால் காலம் தாழ்த்தி நடைபெற்றாலும் உதைப்பந்தாட்ட கழகங்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபெற்றினர். அத்தோடு மென்பந்து துடுப்பாட்டம் , மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெற்றது .german sport17

எமது எதிர்கால சந்ததிகள் ஆரோக்கியமாகவும் சிறந்த வீரவீராங்கனைகளாகவும் திகழ்வதோடு தமிழரின் திறமைகளை உலக அரங்கில் வெளிக்காட்டுவதற்கும் இந்த விழாவானது ஊன்று கோலாக அமையும் என்ற நோக்கத்தோடும் வருடா வருடம் இனத்தின் எழுச்சிக்காக விதையாக வீழ்ந்த மாவீரர்களின் நினைவாக ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .



































No comments:

Post a Comment