September 18, 2015

மர்ம தொலைபேசி அழைப்புகளா? உடனடியாக காவற்துறையினருக்கு அறிவியுங்கள்!

தொலைபேசி வழியாக வர்த்தகர்களை மிரட்டி கப்பம் கோரும் சம்பவம் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர்களை இலக்கு வைத்து, தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் கப்பம் கோரியுள்ள சம்பவம் ஒன்று குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.
சிறையில் இருக்கும் கைதிகள் இந்த தொலைபேசி அழைப்புகளை கையாள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொலைபேசி மூலமாக கப்பம் கோரிய சம்பவங்கள் தொடர்பிலான அனுபவங்களை எதிர்நோக்கியோர் அது பற்றி எந்த அச்சமும் இன்றி அருகில் உள்ள காவற்துறை நிலையங்களுக்கு அறிவிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.
ஏற்கனவே சிறைகளில் இருந்து இவ்வாறு வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் நாட்டில் பரவலாக நடந்துள்ளன.
சிறைகளில் உள்ள பாதாள உலக குற்றவாளிகள் இந்த கப்பம் பெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment