September 1, 2015

கிளி­நொச்சி பொன்னகர் ப­கு­தி­யில் குடிநீர் பிரச்­சி­னை!

கிளி­நொச்சி ஏ9 வீதியின் 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பொன்­னகர் முதலாம் கட்­டைப்­ப­கு­தியில் உள்ள மக்கள் தமக்­கான குடிநீர் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­களைப் பெறு­வதில் தினமும் பெரும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

கிளி­நொச்சி மாவட்­டத்தின் கரைச்­சிப்­பி­ர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பொன்­னகர் முதலாம் கட்டைப் பகு­தியில் 260 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன. இவர்கள் தமக்­கான அன்­றா­டத்­தே­வைக்­கு­ரிய குடி­நீரைப் பெற்றுக் கொள்­வதில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.
தற்­போது நிலவி வரும் வரட்சி கார­ண­மாக கிண­று­களில் நீர் வற்றிக் காணப்­ப­டு­வ­தனால் ஓரிரு கிண­று­க­ளி­லேயே தண்­ணீரைப் பெற வேண்­டிய நிலை­யுள்­ளது. ஆனாலும் அவற்­றிலும் நீர் வற்றி காணப்­படு­கின்­றது.
இதே­வேளை குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவைக்­கு­ரிய நீரைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நீண்­ட­தூரம் செல்ல வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் மற்றும் மின்­சார வசதி, போக்­கு­வரத்து என்­பன காணப்படாமையால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment