September 1, 2015

சம்பூரில் குடிநீர் மற்றும் கொள்கலன் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை!

திரு­கோ­ண­மலை மாவட்டம் மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட சம்பூர் மீள் குடி­யேற்றக் கிராம மக்கள் குடிநீர் மற்றும் கொள்கலன் பிரச்­சினை கார­ண­மாக தமது காணி­க­ளுக்குள் இருப்­பது கடி­ன­மா­க­வுள்­ள­தாகத் தெரி­விக்­கின்­றனர்.

சம்­பூரில் குடி­ய­மர்ந்த போதிலும் அடிப்­படைத் தேவைகள் பூர­ண­மாக்­கப்­ப­ட­வில்லை என சம்­பூரில் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்ட மக் கள் கூறுகின்றனர்.
இங்கு மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்ட கிராம மக்கள் குடிநீர் மற்றும் கெண்­டேனர் பிரச்­சினை கார­ண­மாக தமது காணி­க­ளுக்குள் இருப்­பது கடி­ன­மா­க­வுள்­ள­தாகத் தெரி­விக்­கின்­றனர்.
கடந்த 22 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத் திரிபால சிறிசேன சம்­பூ­ருக்கு விஜயம் செய்து மக்களிடம் உறுதிப்பத்­தி­ரங்­க­ளை கைய­ளித்தார்.
குடி­நீர்ப்­பி­ரச்­சினை, மல­ச­ல­கூடம் மீள் குடி­யேற்றம் செய்­யப்­பட்ட மக்­களின் அடிப்­படைத் தேவை­களுள் ஒன்­றான குடி நீரைப் பெற்­றுக்­கொள்­வதில் தாம் சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­வ­தாக மக்கள் கூறுகின்றனர்.
இதே­வேளை மூதூர் பிர­தேச செய­ல­கத்­தினால் பௌசர்கள் மூலம் தாங்­கி­க­ளுக்கு நீர் விநி­யோகம் செய்­யப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவை போதி­ய­ள­வில் இல்லை.
அத்­துடன் நீரைப் பெற்றுக்கொள்ள தொலை தூரம் செல்ல வேண்­டி­யுள்­ள­துடன், கிண­று­களும் பழு­த­டைந்­துள்­ள­தனால், அவற்றில் நீரைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ள­தா­கவும் சில இடங்­களில் கிணறு வச­திகள் இல்லை என்றும் இப்பகுதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.
மல­சல கூட வச­திகள் குறை­வாகக் காணப்­ப­டு­வ­தனால் சிர­மங்­களை மக்கள் எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.
கொள்கலன்களை உட­ன­டி­யாக அகற்­றவும் நிறு­வனம் ஒன்­றுக்கு வழங்­கப்­பட்ட காணி யைப் பாது­காப்­ப­தற்­காக இப்­ப­கு­தியில் அமைக்­கப்­பட்ட கொள்கலன்களை உடன­டியாக அகற்றித் தரு­மாறும் மக்கள் கூறு­கின்­றனர்.
இப்­ப­கு­தியில் தமது காணிகளுக்குள் கொள்கலன்கள் இருப்­ப­தனால் குடிசை கட்­டு­வது கூட சிர­ம­மா­க­வுள்­ள­தாகத் தெரி­விக்­கின்­றனர். அசா­தா­ரண சூழ்­நிலை கார­ண­மாக 2006 ஆம் ஆண்டு சம்­பூ­ரி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து, கட்­டை­ப­றிச்சான், மணல்­சேனை, கிளி­வெட்டி, பட்­டித்­திடல் ஆகிய நான்கு அகதி முகாம்­களில் மக்கள் தற்­கா­லி­க­மாக தங்கவைக்­கப்­பட்­டனர். கடந்த 10 வருடங்களாக இம்முகாமில் தங்கவைக் கப்பட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த இடமான சம்பூருக்கு குடியேற்றம் செய்யப் பட்டனர்.
இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தமது சொந்த இடமான சம்பூரில் குடியமர்ந்த போதிலும் அடிப்படைத் தேவை கள் பூரணமாக்கப்படவில்லை என தெரிவிக் கின்றனர்.

No comments:

Post a Comment