September 1, 2015

வட மாகாண சபை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த கோரிய சுற்று நிருபம் விரைவில் அனுப்பி வைக்கப்படும்!-சி.வி.கே. சிவ­ஞா­னம்

வட­மா­காண சபையால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாத மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தியும் அது தொடர்பில் தகவல் அனுப்பி வைக்­காத திணைக்­க­ளங்கள், அமைச்­சுக்­க­ளுக்­கான சுற்­று­நி­ருபம் விரைவில் அனுப்பி வைக்­கப்­படும்.

இவ்­வாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவ­ஞா­னம்­தெ­ரி­வித்­துள்ளார்.
வட­மா­காண சபையில் எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் தொடர்பில் கேட்­கப்­பட்­ட­போதே அவர்­இ­தனைத் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்கள் உரிய மத்­திய மாகாண அமைச்­சர்கள், திணைக்­க­ளங்­க­ளுக்கு உட­ன­டி­யா­கவே எவ்­வித தாம­தங்­க­ளு­மின்றி அனுப்­பப்­படும்.
இதற்கு அவர்கள் பதி­ல­ளிக்­கி­றார்­களா இல்­லையா என்­ப­தற்கு பேரவை செய­லகம் எதுவும் செய்­ய­மு­டி­யாது குறிப்­பாக கடந்த காலத்தில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட 4 மீன­வர்­க­ளுக்கு மன்­னிப்­ப­ளிக்க வேண்டும். காணி­அ­தி­காரம் தர­வேண்டும் தொடர்­பான பிரே­ர­ணைகள் தீர்­மா­னங்கள் கடந்த ஆட்­சியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு அனுப்­பி­யுள்ளோம். அதற்கு அவர் பதி­ல­ளிக்­கா­விட்டால் மாகாண நிர்­வாகம் எதுவும் செய்­ய­மு­டி­யாது.
வடக்கு மாகாண சபையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உரிய அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.
இதில் சில நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டும் சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டா­துமுள்­ளன. ஆகையால் தீர்­மா­னங்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது பிழை­யான கூற்­றாகும்.
பேரவை செய­ல­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அனைத்­திற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சில சந்­தர்ப்­பங்­களில் மாகாண சபை, அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் தொடர்பில் குறிப்­பி­டப்­ப­டு­கையில் சில அமைச்­சுக்கள், திணைக்­களங்கள் நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் எம்­மிடம் தக­வல்கள் இருக்­கி­ன்றன. இந்த விட­யத்தை அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் கவ­னத்தில் எடுக்­க­வேண்டும்.
மாகாண சபையின் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்டு அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்டால் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கி­றது அன்றி எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை தொடர்பில் பேரவை செய­ல­கத்­திற்கு தகவல் அனுப்புகின்ற கடமைப்பாடு அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறான சில காரியங்கள் நடைபெறாது உள்ளது. இவை தொடர்பில் அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு உடனடியான அறிவித்தல் வழங்கி சுற்றறிக்கை அனுப்ப வுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment