September 2, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா(படங்கள் இணைப்பு)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
பொலன்னறுவை கதுருவெல ரஜரட்டை நவோதைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பெருமளவான உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளிநாடு சென்றுள்ளமையால் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
நிகழ்வில் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண மீள்புனரமைப்புக்கு உட்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய சக்தியாக முன்னேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.
நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாகவும் ஆனால் தனது பயணம் வேகமான பயணம் இல்லை என்றும் மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை.
நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து கட்சியை வெற்றிக்கான புதிய பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment