September 18, 2015

வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை கடத்தல்!

வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை கடத்த முயன்ற போது ஈச்சங்குளம் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, நொச்சிக்குளம் காட்டுப்பகுதியில் வர்த்தக நோக்கத்துடன் மரங்களை வெட்டி விற்பனைக்காக கொண்டு சென்றுகொண்டிருந்த போது ஈச்சங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று  அதிகாலை அவ்விடத்திற்குச் சென்ற பொலிசார் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டபிள்யூ.பண்டார தலைமையிலான பொலிசாரே இக் கடத்தல் சம்பவத்தை முறியடித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment