August 10, 2015

இரு குழுக்களிடையே மோதல்: மூவருக்கு வெட்டுக் காயம்! காரைதீவில் சம்பவம்!

இரு குழுக்களிடையே நடந்த மோதலில் மூவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் காரைதீவில் நேற்று மாலை
இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசாரின் தகவலின் அடிப்படையில் காயப்பட்ட ஒருவர் சம்மாந்துறை வைத்தியசாலையிலும் இருவர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸ் வாக்குமூல முறைப்பாட்டின் படி மோதலின் போது ஒரு குழுவினர் மது போதையிலிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தேர்தல் வன்முறையா? தனிப்பட்ட குழுவன்முறையா? என்பது தொடர்பில் சம்மாந்துறைப் பொலிசார் மேலதிக விசாரணையிலீடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment