August 10, 2015

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பவ்ரல் அமைப்பினருக்கு பயிற்சி!

2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இம்முறையும் பவ்ரல் அமைப்பு தமது சேவை
நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகளில் இடம் பெறும் முறைகேடுகளை அவதானிப்பதற்காகவும் முறைப்பாடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் 130 கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகள் கடந்தவாரம் வவுனியா மாவட்ட சர்வோதய நிலையத்தில் இடம் பெற்றது.
இதன் தொடர்சியாக நேற்றும், நேற்று முன்தினமும் வவுனியா சர்வோதய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் 25 நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்றன.
இதன்போது வாக்குச்சாவடிகளிலும், வாக்குச்சாவடிகள் தவிர்ந்த வெளி இடங்களிளும் நடைபெறும் தேர்தல் முறைகேடுகளை இனங்கண்டு முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காகவும், அறிக்கைகளை தயாரிப்பது மற்றும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக நடமாடும் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment