August 7, 2015

நந்திக்கடலோரம் எங்களிடம் கையளிக்கப்பட்ட அரசியல் விடுதலைக்கான போராட்டத்தைமுன்னெடுக்கின்றோம்-செல்வராஜா கஜேந்திரன்

கடந்த 2009 இல் முல்லைத்தீவு நந்திக்கடலோரம் எங்களிடம் கையளிக்கப்பட்ட அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தொடர்ந்து
முன்னெடுக்கின்றோம். என முன்னாள் பாாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.02-08-2015 ஞாயிற்றுக்கிழமை யாழ். வல்வெட்டித் துறையில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் கட்சி என்ற வரையறைக்குள் வராது. இது ஒரு தேசிய அரசியல் இயக்கம். தேச அங்கீகாரம் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட வேண்டிய இலட்சிய வெறியுடன் நாங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  உருவாக்கியுள்ளோம்.
தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆணைக்கு அமையவும், முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களான சு.ப.தமிழ்ச்செல்வன், நடேசன் ஆகியோரின் ஆணைக்கு அமையவும், தனது தந்தை மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆணைக்கு அமையவும் இலட்சிய வழி நின்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போராடுகின்றனார்’ என்றார்.

No comments:

Post a Comment