August 11, 2015

தாஜூடீனின் சடலம் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டது!

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் சடலத்தை அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.தாஜூடீனின் சகோதரர் மற்றும் சகோதரியும்
சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.பள்ளிவாசலைச் சேர்ந்த இருவரும், குழியை வெட்டிய நகரசபை ஊழியர்கள் இருவரும் சடலத்தை தோண்டும் போது பிரசன்னமாகி இருந்தனர்.
இஸ்லாமிய முறையின் அடிப்படையில் உடலை நல்லடக்கம் செய்த நபரும் பிரசன்னமாகி இpருந்தார்.சடலத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை காலை 7.30க்கு ஆரம்பமாகி 9.50 அளவில் பூர்த்தியானது.தாஜூடீனின் புதைகுழியில் வேப்பம் செடியொன்று நாட்டப்பட்டதாகவும் அது 12 அடி மரமாக வளர்ந்திருந்ததாகவும் அவரது சகோதரரும் சகோதரியும் தெரிவித்துள்ளனர்.
மரத்தை தோண்டி எடுத்து அதன் பின்னர் சடலம் தோண்டப்பட்டது.இதேவேளை, தாஜூடீனின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு பிரதேச மக்கள் அமைதியான முறையில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

No comments:

Post a Comment