August 9, 2015

ஐ.தே.கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் அதிர்ச்சியில் விஜயகலா!

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் அதன் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக இத்தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடு காரணமாக அதிருப்தி அடைந்த சிரேஸ்ட கட்சி உறுப்பினர்கள் தற்போது அவருக்கெதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க தொடங்;கியுள்ளனர்.

அண்மையினில்  பிரச்சாரத்திற்கு வருகை தந்திருந்தகட்சி தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையத்திற்கு வந்த போது அவரை வரவேற்க அதிருப்தி அணியே சென்று  வரவேற்றுள்ளது.
இதனிடையே விஜயகலாவின் பணிப்பினையடுத்தே வைத்தியர் சிவசங்கரது அலுவலகம் வீடு தாக்கப்பட்டதாகவும் நோர்வேயிலிருந்து வருகை தந்து யாழினில் தங்கியுள்ள சேது எனும் நபரே இதன் பின்னணியினிலிருந்தாக குற்றஞ்சாட்டாப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment