June 7, 2015

தமிழீழ மாணவர் எழுச்சி நாளில் உறுதியெடுப்போம் – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது எழுச்சிக்கரமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.நாம் அரசாட்சி செய்து தலைநிமிர்ந்து வாழ்ந்த எமது உயிரினும் மேலான தமிழீழ மண் இன்று சிங்கள
பேரினவாதத்தால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. வந்தோரை வரவேற்ற எமது தமிழீழ உறவுகள் சொல்லெனா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட வகையில் எமது மக்களின் கருத்துரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை பொருளாதாரவுரிமை மறுக்கப்பட்டு எமது சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எமது சகோதரர்களை துன்புறுத்தி திட்டமிட்ட தமிழினவழிப்பை சிங்கள பேரினவாதம் நடாத்தி வருகின்றது.
இந்த வலியும் துயரமும் சூழ்ந்துள்ள காலத்தில் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவாக முன்னெடுக்கின்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாளை யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு எழுச்சி பூர்வமாக நினைவுக் கூர்வதோடு மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.
அன்பான எமது இளையோர்களே! சிங்களத்தின் ஆதிக்கத்துக்குள் உள்ளாகியுள்ள எமது தமிழீழ மண்ணை மீட்டெடுத்து, திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தமிழினத்தை காத்து கௌரவமாக வாழவைக்க வேண்டியது அவசியமாகவும் காலத்தின் கட்டாயகமாகவும் திகழ்கின்றது. ஆகையால் „மாணவர் சக்தியே மாபெரும் சக்தி’ என்பதை உணர்ந்து தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, நீதி, நேர்மை, பன்பு கொண்ட இளையோர்களாக எமது தேசத்தை மீட்டெடுக்க போராட வேண்டியது இளையோரின் கடமையாகும்.
எம் தமிழுறவுகளே தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையை எம் மனதில் நிறுத்தி தமிழீழமே எமது இறிதியான உறுதியான முடிவென சனநாயக வழியில் சோராமல் தொடர்ச்சியாக நாம் போராடினால் தமிழீழம் என்ற அழகான தேசம் மலர்வது திண்ணம்.
எமது மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் „எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போமென தமிழீழ மாணவர் எழுச்சி நாளில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மாவீரர்கள் மீதும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட எமது உறவுகள் மீதும் உறுதி எடுக்கின்றோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இவ்வண்ணம்
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

No comments:

Post a Comment