June 20, 2015

குறிகட்டுவான் காவல் நிலையம் மீது தாக்குதல் விவகாரம்! கைதுகள் தொடரும்!

குறிகட்டுவான் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்ட குழு தொடர்பில் இரகசிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
       

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து பேரை கடந்த மாதம் 17ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் தடுத்து வைத்திருந்த போது அவர்களை தம்மிடம் தருமாறும் தாம் அவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் காவலரண் முன்பு மக்கள் கூடி போராட்டம் நடாத்தினார்கள்.
 
அந்த நேரம் குழு ஒன்று பொலிஸ் காவலரண் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டார்கள். அத் தாக்குதலினால் ஆறு பொலிசார் காயமடைந்தனர் அத்துடன் பொலிஸ் ஜீப் ஒன்றும் சேதத்திற்கு உள்ளாகியது.அதன் பின்னர் குறித்த பொலிஸ் காவலரண் மூடப்பட்டு விட்டது.
 
தற்போது அன்றைய தினம் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்ட குழு தொடர்பில் தற்போது இரகசிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment