June 20, 2015

சட்ட விரோதமாக வல்லப்பட்டைகளை கடத்திய சீனவர் கைது.!

சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டைகளை கடத்த முற்பட்ட வௌிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 01.20க்கு பேங்கொங் நோக்கி புறப்படத் தயாராக இருந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகாரிகளால் சந்தேகநபரின் பயணப் பையை சோதனையிட்டபோது வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 23 கிலோ 600 கிராம் வல்லப்பட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு இவற்றின் பெறுமதி நான்கு இலட்சத்து 72இ000 எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் 44 வயதான சீனப்பிரஜை ஆவார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment