May 13, 2015

கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர்.வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று புதன்கிழமை அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தங்களில் 43 பேர், 10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுவதுடன், மிகுதிப் பேர், 5 தொடக்கம் 10 வருடங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர். கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தங்களை நியமனம் செய்யுமாறு கோரி அவர்கள்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஈபிடிபியினரால் அரசியல் ரீதியாக தாங்கள் பழிவாங்கப்பட்டதாகவும் தங்களிற்கான நிரந்தர நியமன சந்தர்ப்பங்கள் தடுக்கப்பட்டதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment