May 13, 2015

பேராதனைப் பல்கலைக்கழக மாணவரிடையே இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவக் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஆறுபேர் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் பொறியியல் பீட மாணவர்கள் சிலருக்கும் கலைப் பீட மாணவர்கள் சிலருக்குமிடையே இம்மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெறுவதற்கு சில மணிநேரம் முன்னர் சரச்சந்திர திறந்த வெளி அரங்கிற்கு அருகில் பொறியியல் பீட மாணவன் ஒருவனும் மாணவி ஒருவரும் கதைத்துக் கொண்டிருந்தபோது கலைப்பீட மாணவர்கள் சிலர் அவர்களுக்கு இடையூறு விளைவித்ததைத் தொடர்ந்து இரண்டு குழுவினரும் தடிகள் சகிதம் மோதிக் கொண்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்தே அதிகாலை 1 மணியளவில் பிரச்சினை பெரிதாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதும் கடும் இருள் காரணமாக தாக்கியவர்களை இனங்காணமுடியாதுள்ளதாக காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பேராதனைப் பொலிஸார் இது விடயமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment