May 12, 2015

பல்வேறு முறைகேடுகள் - நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்!

நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் சி பெரேரா தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவின் பணிப்புரைக்கமைய திங்கட்கிழமை (11) நடைமுறைக்கு வரும் வகையில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரை, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் கடமையாற்றி திசாநாயக்க என்பவர் பதில் பொறுப்பதிகாரியாக கடமை புரிகின்றார். சுமித் சி பெரேரா சாராய பார்கள், மற்றும் மணல் கொள்ளை  மீற்றர்வட்டி கொடுப்போர் ஆகியவற்றிற்கு ஆதராவாகச் செயற்பட்டார் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment