May 11, 2015

தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்த மாண்புமிகு புரட்சித் தலைவிக்கு வாழ்த்துகள்!

தமிழகத்தின் தீயசக்திகள் ஒன்று திரண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களுக்கு எதிராக தொடர்ந்த பொய்வழக்கு உடைத்து நொறுக்கப்பட்டு இன்று நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.. தர்மம் வென்றுள்ளது.


தமிழகத்தின் நலன் ஒன்றே தம் ஒற்றை வாழ்க்கையாக தவமாக வாழ்ந்து வரும் மாண்புமிகு புரட்சித் தலைவியை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என பகல் கனவு கண்ட நிலையில் பல்லாண்டுகாலம் பொய் வழக்குகளால் தமிழின துரோகிகள் துன்புறுத்தி வந்தனர்.

இந்த பொய்வழக்குகளில் இடைக்காலத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் தங்களுக்கான வெற்றி என்ற மமதையில் துள்ளி திரிந்தனர்.. ஆனால் எத்தனை இடர்பாடும் துயரமும் வந்த போதும் தமிழக மக்களே தம் உயிராக மதிக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டத்தின் துணை கொண்டு சதிகாரர்களை எதிர்கொண்டார்..

இதோ இன்று நீதி வென்றுள்ளது.. சட்டம் நியாயத்தின் பக்கம் நிமிர்ந்து நிற்கிறது.. தர்மம் வென்று தலைநிமிர்ந்துள்ளது.. உலகத் தமிழினம் மகிழ்ச்சியில் திளைக்கிறது...

தமிழக மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மீண்டும் முதலமைச்சர் அரியாசனத்தில் அமர இருக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment