April 19, 2015

ஈழத்திலொரு ஐம்பத்து ஆறு கோழி முட்டைகளை குடித்து கிட்னஸ் உலக சாதனை முயற்சி!

ஈழத்தில் ஐம்பத்து ஆறு கோழி முட்டைகளை குடித்து கிட்னஸ் சாதனை முயற்சியில் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். இச்சாதனை முயற்சி இன்று காலை பதினொரு மணியளவில் இளவாலை கரும்பனை சனசமூக நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி வடக்கு திருவிழானை சேர்ந்த அப்புத்துரை ராசேந்திரம் [வயது-53] எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நூற்று பத்து முட்டைகள் குடிக்கப்பட்டதே உலக சாதனையாக உள்ளது. இச்சாதனையை முறியடிக்கும் பரீட்சாத்த நடவடிக்கையாகவே இச்சாதனை முயற்சியினை அவர் மேற்கொண்டிருந்தார்.
காலை 11.10 மணியளவில் முட்டை குடிக்க ஆரம்பித்த அவர் காலை 11.13 மணி 14 வினாடிகளில் 56 கோழி முட்டைகளை குடித்து போட்டியை இடை நிறுத்திக் கொண்டார். இச்சாதனை முயற்சி தொடர்பில் ராசேந்திரம் தெரிவிக்கையில் பல நாள் பயிற்சியின் பின்னரே இச்சாதனை முயற்சியை மேற்கொண்டிருந்தேன்.
IMG_7235எனது முயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை அளிக்கா விட்டாலும் தொடர்ந்தும் இவ்வாறு சாதனை முயற்சியை மேற்கொள்ளவுள்ளேன். ஒவ்வாமை காரணமாகவே ஐம்பத்து ஆறு முட்டைகளை குடித்து விட்டு சாதனை முயற்சியை இடை நிறுத்தினேன் இவ்வாறான சாதனை முயற்சிகளை எமது இளந்தலை முறையினரும் மேற்கொள்ள வேண்டும். என்றார் அவர்.IMG_7235
IMG_7234
  IMG_7236                     IMG_7237
 IMG_7238
 IMG_7239
  IMG_7243                                       IMG_7244

No comments:

Post a Comment