April 19, 2015

தமிழரசு மேதினம் திருமலையில்!

எதிர்வரும் மேதினத்தை திருகோணமலையினில் அனுஸ்டிக்க தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.இன்று யாழ்.நகரின் மார்டின் வீதி தலைமையத்தினில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேதினத்தை திருகோணமலையினில் அனுஸ்டிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இக்கூட்டத்தினில் கூட்டமைப்பு வசமுள்ள தமிழரசுக்கட்சி தலைமையை கொண்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட கிளைக்குழுவை சேர்ந்தவர்களென பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக வவுனியாவினில் மேதினத்தை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்ட போதும் அம்முயற்சி பின்னர் கைவிடப்பட்டுவிட்டது.
இம்முறை ஜ.தே.கவுள்ளிட்ட எந்தவொரு கட்சியுடனும் கூட்டின்றி மேதினத்தை நடத்துவதுடன் கட்சி தலைவர் சம்பந்தனிற்கு வீழ்ச்சியடைந்துவரும் மக்கள் ஆதரவை தூக்கிநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment