April 24, 2015

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செல்வாக்கை சரிக்க இந்திய ஊடகம் சதி ( படங்கள் இணைப்பு)

சுவாமி பிரேமானந்தா வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற மூன்று குற்றவாளிகளையும் விடுதலை செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


பருவமடையாத சிறுமிகள் உட்பட 13 பெண் பிள்ளைகளை பலவந்தம் செய்ததாகவும் பிரேமானந்தாவின் திருச்சி ஆசிரமத்திலிருந்த இருவரை கொலை செய்ததாகவும் இவர்கள் மீது குற்றங்காணப்பட்டது.

இவ்வழக்கில்இ தண்டனை விதிக்கப்பட்டது மட்டுமன்றி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் கால சிறைத் தண்டனை உச்ச நீதிமன்றத்தினால் 2005 இல் உறுதி செய்யப்பட்டது.

பிரேமானந்தா 2011இல் இறந்து போனார். ஏனைய மூவரும் சென்னை புழல் சிறையில் உள்ளனர். இவர்கள் நால்வருமே இலங்கையர் ஆவர்.

முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதியான விக்னேஸ்வரன் குற்றவாளிகளை நிரபராதிகள் என கூறி நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததையிட்டு உயர் அதிகாரிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

பிரேமானந்தா மற்றும் அவரது சிஷ்யர்கள் மீது பொய் வழக்கு சோடிக்கப்பட்டதாகவும் சி.வி விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரேமானந்தஇ 59 வயதில் கடலூர் சிறையில் 2011 இல் இருந்தார். இவரது சீடர்கள் கமலானாந்தாஇ பாலன்இ சதீஸ் ஆகியோர் பெண் பிள்ளைகளை பலாத்காரம் செய்யவும் ரவி என்பவரை கொலை செய்து ஆசிரமத்தினுள் புதைக்கவும் உடந்தையாக இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பலாத்காரம் செய்யப்பட்டு கருவுற்ற பெண் பிள்ளைக்கு கமலானதனின் மனைவி டாக்டர் சந்திரதேவிஇ கருச்சிதைவு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.

இவருக்கு 39 மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்காலம் முடிந்து அவர் தற்போது வெளியில் உள்ளார். கமலனாதனும் பாலனும் பொறியியல் பட்டதாரிகள்.

குற்றவாளிகளை விடுவிக்கும்படி கேட்பது சரியானதா என மின்னஞ்சல் மூலம் கேட்டதற்குஇ விக்னேஸ்வரன் பதிலளிக்கவில்லை. சோதனை மூலம் பிரேமானந்தா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீதவான் ஆர் பானுமதிஇ பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 66.4 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரன் மறுப்பு

பிரேமானந்தா வழக்கு தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியையிட்டு தாம் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் செயலக வட்டாரங்கள், குறிப்பிட்ட செய்தி திரிவுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இருந்தபோதிலும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மகள், அத்தண்டனையை இரத்துச் செய்யக்கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முதலமைச்சரின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்த முதலமைச்சர்இ 'சம்பந்தப் பட்டவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய கடிதத்தை உங்களுடைய கவனத்துக்கு அனுப்பிவைக்கிறேன்' என ஒரு குறிப்பை இணைத்துள்ளார்.
modi_letter_1 modi_letter_2 modi_letter_3

No comments:

Post a Comment