February 20, 2015

வலி.வடக்கிலுள்ள விடுதிகளை மூடமுடியாது. இராணுவம்!

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நட்சத்திர விடுதிகளை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுக்கப்பட்ட கோரிக்கையை இராணுவம் நிராகரித்துள்ளது.

வடக்கில் இராணுவத்திற்கு சொந்தமான 18 நட்சத்திர விடுதிகள் இயங்கி வருகின்றன. அவற்றை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரருமான சுரேஸ் பிரேமசந்திரன் புதிய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் குறித்த விடுதிகளை உடைத்து விட்டு அந்த இடங்களில் தமிழ் மக்களை குடியேற்றுமாறு சுரேஸ் பிரேமசந்திரன் கோரியதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இந்த விடுதிகள் அரசுக்கு சொந்தமான காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளது. என்பதனால் அவை அகற்றப்படமாட்டாது என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளதாக குறித்த பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment