February 21, 2015

விமல் வீரவன்சவின் மனைவி தலைமறைவு!

முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் சாதாரண கடவுச் சீட்டு ஆகியவற்றில் போலியான தகவல்களை வழங்கியதாக சசி வீரவன்ச மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.

போலியான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் பெயர் உள்ளிட்ட விபரங்களை போலியாக வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடாத்த சசி வீரவன்சவின் வீட்டுக்கு சென்ற போது அவர் அங்கு இருக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடுவெலவில் அமைந்துள்ள சசி வீரவன்சவின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்ற போது அவர் அங்கு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சசி வீரவன்சவை கைது செய்ய ஏழு காவல்துறை குழுக்கள் கண்டி, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது மனைவியை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை எனவும், முடிந்தால் அவரை கைது செய்யுமாறும் விமல் வீரவன்ச அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார்.

சசி வீரவன்வை காவல்துறையினர் விரைவில் கைது செய்வார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment