February 22, 2015

மகிந்த அரசாங்கத்தின் பரப்புரை ஒப்பந்தகள் அனைத்து ரத்து!

யுத்தக்குற்றங்கள் விடயத்தில் தங்களுக்கு ஆதரவு திரட்டிக் கொள்வதற்காக முன்னாள் சிறிலங்காவின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த
ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் அமெரிக்காவுக்கான தூதுவர் பிரசாரத் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மகிந்த அரசாங்கம் யுத்தக்குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, அமெரிக்காவின் நட்டை பெறுவதற்கு பரப்புரை வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

இதற்காக மாதாந்தம் லட்சக்கணக்கான டொலர்களை செலவிட்டு வந்தது.

எனினும் தற்போது இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment