August 16, 2014

Welcome Welcome கனடா - ஏஜெக்ஸ் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் காணாமற்போயுள்ளார் - பொதுமக்கள் உதவியை காவல்த்துறையினர் நாடியுள்ளனர்:


கனடா ஒன்டாறியோ மாகானத்தில் - ஏஜெக்ஸ் பிரதேசத்தில் வசித்துவந்த யாழ் அளவெட்டியை சேர்ந்த செல்லப்பா கனகரட்ணம் வயது 64 என்ற முதியவர் 15-08-14 வெள்ளிக்கிழமையன்று
காலை முதல் காணாமல்ப் போயுள்ளார். காலை 9 மணியளவில் தனது வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள வீதியொன்றில் உடற்பயிற்சிக்காக நடைப்பயணம் மேற்க்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது - நாளாந்தம் நடைபயிற்சிக்கு சென்றுவரும் இவர் திடீரென காணாமற்போனமை உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் நகரகாவல்த்துறையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்த்துறையினரும் பொது மக்களும் அப்பகுதியில் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வயோதிபர் தொடர்பான தகவலறிந்தோர் கீழ்வரும் தொலைபேசிக்கு அழைத்து தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நந்தன் - 647 261 3431 -
நகர காவல்த்துறை - (905) 579-1520, Ext. 5100

No comments:

Post a Comment