July 20, 2016

அவிஸ்சாவலை கொடிகாவத்தை பகுதியில்போ லி கடவுச்சீட்டு அச்சகம் சுற்றிவளைப்பு!

போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை அச்சிட்டு வந்த அச்சகத்தினை பொலிசார் சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.


குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், நேற்று அவிஸ்சாவலை கொடிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 75ற்கும் அதிகமான போலிக் கடவுச்சீட்டுகள் மற்றும் குவைட் வீசாக்கள் போன்றவையும் அச்சக உபகரணங்கள் சிலவற்றுடன் 2 இலட்ச ரூபாய் பணம், மோட்டார் வண்டி, முச்சக்கர வண்டி போன்றவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெக்கிராவை மற்றும் மரதன்கடவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.





No comments:

Post a Comment