July 20, 2016

தமிழரசுக் கட்சி பிரமுகர்களுடன் கனடிய எம்.பி ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு!

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.


 
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment