June 27, 2016

27 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கேசன்துறை பஸ் நிலையத்தில் இருந்து சேவைகள் ஆரம்பம்!

காங்கேசன்துறை பஸ் தரிப்பு நிலையம் 27 வருடங்களிற்கு பின்னர் நேற்று சொந்த இடத்திற்கு சென்றுள்ளது. காங்கேசன்துறைக்கான பஸ் சேவை மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வரையே இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் காங்கேசன்துறை ரயில்நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பஸ் தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

 
இந்தக் காணி மீளக் கையளிப்பின் ஊடாக, பொன். பரமானந்தன் வீதியின் ஊடாக கட்டுவன் வரையான வீதியும், மல்லாகம் கட்டுவன் வீதியும் மற்றும் பொன். பரமானந்தன் மல்லாகம் இணைப்பு வீதியும் மக்கள் பாவனைக்கு மீள கிடைக்கப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment